ராவணகோட்டம் ஒரு பார்வை

ravana kottam review

கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் எழுத்து இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் ராவணக்கோட்டம் .

மேல தெரு தலைவர் பிரபு ஊர் தலைக்கட்டு அது போல கீழ தெரு தலைவர் இளவரசு இவர்களுடன் சாந்தனு ஆனந்தி சஞ்சய் சரவணன் தீபா மற்றும் பலர் நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார் .

ravana kottam review
மேல தெரு மக்களும் கீழ தெரு மக்களும் ஒற்றுமையாக வாழ்வதை பொறுக்காத அரசியல்வாதிகள் அவர்களுக்குள் பிரிவினையை தூண்டி குளிர் காய, ஊர் ரெண்டு படுகிறது அரசியல் விளையாட்டில் பிரபு இளவரசு இருவரும் விபத்து ஏற்படுத்தி கொல்லப்படுகின்றனர்.

சாந்தனுவும் அவர் நண்பரும் பகையாளியாக மாற ஆனந்தி அவரை அறியாமலே காரணம் ஆகி விடுகிறார்.முடிவில் நண்பர்கள் ஓன்று சேர்ந்தார்களா? ஊர் பிரச்சினை தீர்ந்ததா? சாந்தனு ஆனந்தி திருமணம் நடந்ததா? அரசியல் வாதிகளாக அருள் தாஸ்  P L தேனப்பன் தேர்ந்த நடிப்பு .ஆனந்தி இயல்பான நடிப்பு. குறிப்பாக தீபா சங்கர் குடும்பத்தில் ஒரு அக்காவின் ஞாயமான கோபத்தை ரொம்ப யதார்த்தமாக வெளிப்படுத்தி உள்ளார்

நாயகன் சாந்தனு இந்த படத்திற்க்காக கடுமையாக உழைத்துள்ளார் .

ravana kottam review
சிறு சிறு குறைகள் தென் பட்டாலும் அரசியல் கலந்து கருவேல மரங்களின் மூலம் நீர் வளம் குறைவது குறித்த விளக்கம் சமூக அக்கறையோடு நல்ல திரை படத்தை கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி நடிகர் சாந்தனு மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்